படிப்பினை கட்டுரை

நீங்கள் ATM  பணம் எடுக்கும் போது


நீங்கள் ATM ல் பணம் எடுக்கும் போது திடீரென ஒரு திருடன் வந்து உங்களிடம் பணம் எடுத்துத்தருமாறு மிரட்டினால்,உங்கள் நுளைவு எண் அதாவது PIN Number ஐ தலைகீளாக அடிக்கவும்.அதாவது 1234 என்றால் 4321 என்று அடிக்கவும்,
அவ்வாறு நீங்கள் அடிக்கும் போது,உங்கள் பணம் வெளியே வரும்,ஆனால் பாதியிலே சிக்கிக்கொள்ளும்.அப்போது காவல் நிலையத்துக்கு தகவல் சென்றுவிடும் எல்லா ATM இலும் இது உண்டு.
இது எத்தனை பேருக்குத்தெரியும்.இதனால் இதை மற்றவர்களுக்கு SHARE செய்யுங்கள்.



இரு சக்கர வாகன ஓட்டுவோர் கவனத்திற்கு...



வானிலையில் நிலவும் அதிக வெப்பத்தின் காரணமாக பெட்ரோல் டேங்க் வெடிக்கும் அபாயம் உள்ளது,பெட்ரோல் டேங்கை முழுவதுமாக நிரப்பும் போது, காற்று சுழற்சிக்கு இடமில்லாத காரணத்தால் பெட்ரோல் சூடாகி டேங்க் வெடிக்கும் அபாயம் உள்ளது.இதுவரை பலர் உயிரிழந்துள்ளனர்,எனவே பாதி டேங்க் மட்டுமே பெட்ரோல் நிரப்பவும்.இது INDIAN OIL நிறுவனத்தின் அறிவிப்பு.எனவே முடிந்தால் இதனை SHARE செய்யவும்.

நண்பனுக்கு நடந்த உண்மைச் சம்பவம்


சில வருடங்களுக்கு முன் கொழும்பில் இருந்த போது மாலை நேரங்களில் நாம் மூன்று நண்பர்கள் ஒரு பொது மைதானத்தின் ஓரத்தில் கூடி இருந்து அரட்டை அடிப்பது வழக்கம். ஒரு நாள் சிறு மழை காரணமாக நானும் ஒரு நண்பரும் அங்கு செல்லவில்லை.
இருட்டி விட்ட பின் சுமார் 10 மணி போல் என் மூன்றாவது நண்பனின் ரூம் மேற் என்னிடம் தொலை பேசியில் அழைத்து அந் நண்பன் வழமை போல் மைதானம் சென்றதாகவும் இன்னும் திரும்பவில்லை எனவும் கூறி எங்கே என விசாரித்தான். நான் இன்று அங்கு செல்லவில்லை என கூறி, இராணுவக் கெடுபிடி சற்று அதிகமாக உள்ள காலமாகையால் அவனைத் தேடி மைதானம் விரைந்தேன்.


அங்கு போய் பார்த்த போது அதிர்ச்சி, நண்பன் வாயில் இருந்து நுரை தள்ளி இருந்தது. அவன் சுயநினைவற்று மயங்கி இருந்தான். நடந்தது என்ன என தெளிவாக ஊகிக்க முடியாது இருந்தது. அவனுடைய பேர்ஸ் மற்றும் போன் இருக்கிறதா என உறுதிப்படுத்தி வேறு நண்பர்களின் துணையுடன் இவரை இருப்பிடத்தில் சேர்த்தோம். தேவையான அடிப்படைகளை செய்தோம்.

மறு நாளும் நினைவு முழுமையாக திரும்பாததால் ஒரு டாக்டரிடம் நிலமையை விளக்கி மருந்து வாங்கி கொடுத்தோம்.

அடுத்த நாள் மாலை நினைவு பகுதியாக திரும்பிய பின் தான், தன் கையில் இருந்த தங்க மோதிரம் கழுத்தில் இருந்த தங்க டாலர் பறி போனதை நண்பன் உணர்ந்தான்.

சரி நடந்தது என்ன? நினைவு திரும்பிய பின் நண்பனே சொன்னான்.

வழமைபோல அவன் மைதானம் சென்று எங்களுக்காக காத்திருந்தான். நேரமாக வேறு இரு நபர்கள் அரட்டை அடிக்க அங்கு வந்து இருந்தனர்.சிறிது நேரத்தில் அவர்கள் நண்பனுடன் நட்புடனும் நாகரிகமாகவும் பேசினர். பேச்சு படிப்படியாக அரசியல், கிரிக்கெற், பொது என வளர்ந்து சென்றது. இடையில் அவர்கள் சிகரட் புகைத்தனர். பின் நண்பனிடமும் ஒரு சிகரட் கொடுத்தனர். முதலில் மறுத்த நண்பன் பின்னர் புகைக்கத் தொடங்கினான். மூன்று Puff இழுத்தான். அவ்வளவு தான், அதற்கு மேல் நடந்தது எதுவும் நினைவில்லை. அவர்கள் ஏதோ ஒரு மூளையை மந்தமாக்கும் வீரியமான பொருளை சிகரட்டினுள் வைத்து கொடுத்திருக்க வேண்டும்.அதன் பின் இவ் மோதிரத்தையும் டாலரையும் எடுத்துக் கொண்டு எஸ்கேப் ஆகி இருக்க வேண்டும்.




No comments:

Post a Comment